எண் ஆறில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

saran
0
ஆறாம் எண் சுக்ரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் (6, 15, 24)


6 – உயரமாகவும், கம்பீரமான தோற்றம் உடையவர். நல்ல ஆடைகளை அணிந்து நாகரீகமாக இருபார். எங்கும் எவரிடயேனும் பளிச்சென விளங்க நினைபார். விருதும், புகழும், பொருளும் அடைவார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருப்பர். தெய்வபக்தியும், அடக்கமும் உள்ள மரியாதையானவர். மென்மையான சரீரமும் குழந்தை உள்ளம் படைத்தவராக இருபார். அந்நிய மொழிகள் அறிந்திருப்பார். நட்புணர்வு கொண்டவர், பயனில்லாதவருடன் பழகமாட்டார், முட்டாள்களை வெறுப்பார். துணிவுள்ளவர், கருமியாக இருப்பார். எதாவது ஒரு இயக்கம் அல்லது அமைப்பு ஒன்றை துவங்குவார். போராடத் தயங்கமாட்டார், நிலையாக எக்கருத்தையும் ஆதரிக்க மாட்டார், புதிய கருத்துகளை பேசுவார். நீண்ட ஆயுள் கொண்டவர்.

15 – வளமான சிந்தனை கொண்டவர். கலை, அரசியலில் நன்கு பிரகசிப்பர். நகைச்சுவை உணர்வும், இளகிய மனமும் கொண்டவர். பத்திரிகை தொடர்பு உள்ளவர், ஆன்மிக, வேதாந்த நூல்கள் எழுதுவார். தம் கருத்துகளை வெகு நேர்த்தியாக மக்களிடம் பரப்புவார். சக்கரை வியாதி, வயிற்றில் நோய் உண்டாகலாம். எந்த பதவியிலும் நீடித்து இருக்கமாட்டார். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

24 – நினைத்த காரியங்களை சாதித்து கொள்பவர்கள். பொருளுடன் மனைவி அமைவர், சிலருக்கு மண வாழ்வு அமையாது. பொருளும், புகழும் சேர்ந்தே கிடைக்கும். அரசியல், சினிமா, எழுத்துலகில் இடம்பிடிக்கலாம். தீயோர் சூழ்ந்து பொருளையும், நற்பெயரையும் அழிப்பார்கள். பதவி, சுகம் இருந்தாலும் பயம் தரும் வாழ்க்கையாக அமையும், சிறைவாசமும் உண்டு. அபாரமான துணிச்சல் மிக்கவர்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)