திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் (9/9)

saran
0

ஒன்பதாம் தந்திரம் (2649 - 3047)




1. குருமட தரிசனம்

பலியும் அவியும் பரந்து புகையும்

ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்

குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்

தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 2649


இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை

அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்

அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்

அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2650

 

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்

கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி

தேட அரியன் சிறப்பிலி எம்இறை

ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 2651

 

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்

இயம்புவன் சித்தக் குகையும் இடமும்

இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்

இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 2652

 

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்

அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி

அகம்பர மாதனம் எண்எண் கிரியை

சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 2653

 

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்

சகமுக மாம்சத்தி யாதன மாகும்

செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்

அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 2654

 

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்

காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே

தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்

ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 2655

 

2. ஞானகுரு தரிசனம்

 

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்

கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்

வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்

பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 2656

 

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி

அரிய பரசிவம் யாவையும் ஆகி

விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே

பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2657

 

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்

வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்

காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்

சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 2658

 

கருடன் உருவம் கருதும் அளவில்

பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்

குருவின் உருவம் குறித்த அப் போதே

திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 2659

 

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு

அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்

அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 2660

 

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்

மான்ற அறிவு மறிநன வாதிகள்

மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற

ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 2661

 

சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்

கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்

பந்தம் இலாத பளிங்கின் உருவினள்

பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 2662

 

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ

நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்

சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க

வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 2663

 

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்

தானாம் பறவை வனமெனத் தக்கன

தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்

தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 2664

 

மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி

உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்

கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு

அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 2665

 

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்

பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு

நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்

தலைப்பட லாகும் தருமமும் தானே. 2666

 

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்

தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்

கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 2667

 

தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை

விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க

அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை

நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 2668

 

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி

நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்

திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே

புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 2669

 

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்

சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்

இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே

சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 2670

 

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்

கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது

மண்ணு நீரனல் காலொடு வானுமாய்

விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 2671

 

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்

பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்

பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு

உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 2672

 

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்

தம்பர மல்லது தாமறியோம் என்பர்

உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்

எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 2673

 

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்

நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்

தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்

போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 2674

 

3. பிரணவ சமாதி

 

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை

பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்

சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்

மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 2675

 

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2676

 

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 2677

 

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்

அருக்கம் சராசரம் ஆகும் உலகில்

தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி

சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 2678

 

மலையும் மனோபவம் மருள்வன ஆவன

நிலையில் தரிசனம் தீப நெறியாம்

தலமும் குலமும் தவம்சித்த மாகும்

நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 2679

 

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு

ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்

கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து

ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 2680

 

4. ஒளி

 

ஒளியை அறியில் உருவும் ஒளியும்

ஒளியும் உருவம் அறியில் உருவாம்

ஒளியின் உருவம் அறியில் ஒளியே

ஒளியும் உருக உடனிருந் தானே. 2681

 

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்

அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்

பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே

இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2682

 

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்

துளங்கொளி பெற்றன சோதி யருள

வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு

களங்கொளி செய்து கலந்து நின்றானே. 2683

 

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி

துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்

வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி

விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 2684

 

மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்

பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்

நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்

மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 2685

 

மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி

பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி

துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்

உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 2686

 

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து

துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்

உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற

வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 2667

 

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்

துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்

அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்

களங்கொளி ஈசன் கருத்தது தானே. 2688

 

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்

துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி

விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி

உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 2689

 

உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்

வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி

விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி

வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 2690

 

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த

துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்

களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட

விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 2691

 

போது கருங்குழற் போனவர் தூதிடை

ஆதி பரத்தை அமரர் பிரானொடும்

சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி

நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 2692

 

உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது

பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்

கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்

விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 2693

 

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே

படருறு காட்சிப் பகலவன் ஈசன்

அடருறு மாயையின் ஆரிருள் வீசில்

உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 2694

 

ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்

அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்

களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி

ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 2695

 

ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற

தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்

பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற

வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 2696

 

தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்

தானே யிருக்கும் அவனென நண்ணிடும்

வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்

பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 2697

 

5. தூல பஞ்சாக்கரம்

 

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்

ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 2698

 

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி

உகார முதலாக ஓங்கி உதித்து

மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி

நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2699

 

அகராதி ஈரெண் கலந்த பரையும்

உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்

சிகராதி தான்சிவ வேதமே கோணம்

நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 2700

 

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி

ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்

தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்

ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 2701

 

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்

கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்

அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 2702

 

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்

ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்

சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்

வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 2703

 

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று

உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்

வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்

துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 2704

 

குருவழி யாய குணங்களில் நின்று

கருவழி யாய கணக்கை அறுக்க

வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு

அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 2705

 

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது

செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்

குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்

குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 2706

 

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று

துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுரை

அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 2707

 

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது

இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்

பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்

அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 2708

 

6. சூக்கும பஞ்சாக்கரம்

 

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை

ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்

தெளிய ஒதிச்சிவாயநம என்னும்

குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 2709

 

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை

அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர

அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2710

 

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்

சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை

சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்

பவமது அகன்று பரசிவன் ஆமே. 2711

 

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்

ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்

தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்

ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 2712

 

நமாதி நனாதி திரோதாயி யாகித்

தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்

சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே

நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 2713

 

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்

ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை

திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்

அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 2714

 

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்

சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்

சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 2715

 

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே. 2716

 

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்

பவமது தீரும் பரிசும்அது அற்றால்

அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 2717

 

7. அதிசூக்கும பஞ்சாக்கரம்

 

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 2718

 

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்

அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு

துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2719

 

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்

எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது

சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்

அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 2720

 

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை

எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 2721

 

8.1 திருக்கூத்து தரிசனம்

 

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 2722

 

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2723

 

8.2 சிவானந்தக் கூத்து

 

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்

தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்

ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 2724

 

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்

ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்

ஆனந்தம் ஆக அகில சராசரம்

ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 2725

 

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்

அளியார் சிவகாமி யாகும் சமயக்

களியார் பரமும் கருதுறை யந்தக்

தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 2726

 

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்

ஆன நடமாடி ஐங்கரு மத்தாக

ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே

தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 2727

 

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட

மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட

தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து

ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 2728

 

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்

கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்

பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட

நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 2729

 

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்

வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்

ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்

போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 2730

 

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்

மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்

தாபதர் சத்தர் சமயம் சராசரம்

யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 2731

 

8.3 சுந்தரக் கூத்து

 

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்

உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்

கண்டம் கரியான் கருணை திருவுருக்

கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 2732

 

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்

நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்

திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை

வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 2733

 

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்

பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்

பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்

பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 2734

 

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்

தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்

சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்

பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 2735

 

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்

கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி

மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா

ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 2736

 

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்

முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்

சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்

சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 2737

 

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்

தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்

தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்

ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 2738

 

8.4 பொற்பதிக் கூத்து

 

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்

அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்

ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்

தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 2739

 

அடிஆர் பவரே அடியவர் ஆமால்

அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 2740

 

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து

இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு

நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்

படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 2741

 

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்

சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 2742

 

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்

பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 2743

 

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்

தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்

செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்

அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 2744

 

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்

வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்

ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த

நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 2745

 

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்

கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி

நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி

நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 2746

 

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்

கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்

சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு

ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 2747

 

பூதல மேருப் புறத்தான தெக்கணம்

ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்

பாதி மதியோன் பயில்திரு அம்பலம்

ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 2748

 

8.5 பொற்றில்லைக்கூத்து

 

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்

பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்

தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்

கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 2749

 

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்

சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து

புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்

நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 2750

 

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட

ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்

பாதி மதியாடப் பாரண்ட மீதாட

நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 2751

 

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்

அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்

செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்

உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 2752

 

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு

சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு

நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்

பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 2753

 

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை

நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை

கடவும் திலைவனம் கைகண்ட மூலம்

படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 2754

 

ஈறான கன்னி குமரியே காவிரி

வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்

பேறான வேதா கமமே பிறத்தலான்

மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 2755

 

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி

வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி

போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்

தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 2756

 

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி

மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்

பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்

கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 2757

 

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்

கூறு சமயக் குருபரன் நானென்றும்

தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே

வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 2758

 

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே

எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி

உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்

தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 2759

 

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்

பாடிய பாட்டும் பலவான நட்டமும்

கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்

தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 2760

 

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்

கரசர ணாதி கலக்கும் படியே

அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்

குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 2761

 

8.6 அற்புதக் கூத்து

 

குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்

அருவுரு வாவது அந்த அருவே

திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்

உருவரு வாகும் உமையவள் தானே 2762

 

திருவழி யாவது சிற்றம் பலத்தே

குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே

உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு

அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 2763

 

நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்

ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட

நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து

ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 2764

 

வளிமேகம் மின்வில்லு வானகஓசை

தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்

களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்

ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 2765

 

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்

ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்

மாயைமா மாயை கடந்துநின் றார்காண

நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 2766

 

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்

கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 2767

 

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்

படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 2768

 

சத்தி வடிவு சகல ஆனந்தமும்

ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்

சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு

ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 2769

 

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 2770

 

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்

தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்

தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே

கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 2771

 

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்

நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை

சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள

நின்றது தான்நெடு மண்டல மாமே. 2772

 

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி

தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி

எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி

அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 2773

 

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்

ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்

மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக

மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 2774

 

அம்பல மாவது அகில சராசரம்

அம்பல மாவது ஆதிப் பிரானடி

அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்

அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 2775

 

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று

ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன

நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்

பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 2776

 

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்

தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்

புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்

கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 2777

 

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்

துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்

ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 2778

 

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது

உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்

கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்

கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 2779

 

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்

அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்

தங்குஉ பயந்தரு நீல மும்உடன்

மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 2780

 

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்

கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி

நீடிய நாதம் பராற்பர நேயத்தே

ஆடிய நந்தி புறம்அகந் தானே. 2781

 

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட

அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட

இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட

அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 2782

 

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்

ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி

ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி

ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 2783

 

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்

மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்

மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே

மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 2784

 

தாமுடி வானவர் தம்முடி மேலுறை

மாமணி ஈசன் மலரடித் தாளினை

வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்

காமணி ஞாலம் கடந்துநின் றானே. 2785

 

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்

தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை

புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்

எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 2786

 

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்

ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்

ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்

ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 2787

 

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து

அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்

துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே

அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 2788

 

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்

சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட

வைத்த சராசரம் ஆட மறையாட

அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 2789

 

இருவருங் காண எழில்அம் பலத்தே

உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்

திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்

அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 2790

 

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்

அவமாட ஆடாத அம்பரம் ஆட

நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்

சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 2791

 

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்

வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்

தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து

நாதப் பிரமம் சிவநாட மாமே. 2792

 

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்

தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்

தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்

தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 2793

 

கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்

வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்

தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி

ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 2794

 

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி

பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்

நேதத் துவமும் அவற்றோடு நேதியும்

பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 2795

 

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்

தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 2796

 

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்

அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்

பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்

திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 2797

 

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு

மருவிய அப்பும் அனலுடன் கையும்

கருவின் மிதித்த கமலப் பதமும்

உருவில் சிவாய நமவென வோதே. 2798

 

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்

அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்

அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி

அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 2799

 

தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி

கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்

மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்

பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 2800

 

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை

மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து

அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர

சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 2801

 

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே

ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்

தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை

ஆயுறு மேனி அணைபுக லாமே. 2802

 

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்

தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை

ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்

ஆனால் அரனடி நேயத்த தாமே. 2803

 

9. ஆகாசப் பேறு

 

உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை

உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை

உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை

உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 2804

 

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்

குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்

பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்

அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2805

 

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை

உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்ட குறியைக் குலைத்தது தானே. 2806

 

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே

பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி

அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு

உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 2807

 

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்

பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்

அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்

பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 2808

 

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து

ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்

ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்

ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 2809

 

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க

உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது

குயில்கொண்ட பேதை குலாவி உலாவி

வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 2810

 

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து

அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி

நணுகிய மின்னொளி சோதி வெளியைப்

பணியின் அமுதம் பருகலும் ஆமே. 2811

 

புறத்துளா காசம் புவனம் உலகம்

அகத்துளா காசம்எம் ஆதி அறிவு

சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி

சகத்துளா காசம் தானம்ச மாதியே. 2812

 

10. ஞானோதயம்

 

மனசந் தியில்கண்ட மனநன வாகும்

கனவுற ஆனந்தம் காண்டல் அதனை

வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 2813

 

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை

அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்

கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2814

 

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்

தக்கார் உரைத்த தவநெறியே சென்று

புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை

நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 2815

 

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு

விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 2816

 

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு

தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை

தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்

தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 2817.

 

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே

அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்

பசும்பொன் திகழும் படர்சடை மீதே

குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 2818.

 

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்

கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்

ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை

எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 2819.

 

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்

நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது

நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்

நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 2820.

 

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி

ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்

ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்

ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 2821.

 

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே

உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்

உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 2822.

 

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 2823.

 

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்

மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி

ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 2824.

 

11. சத்திய ஞானானந்தம்

 

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி

முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே

இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்

தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 2825.

 

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்

நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்

அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2826.

 

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை

அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது

இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்

பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 2827.

 

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்

உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்

வைத்த சொருபத்த சத்தி வருகுரு

உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 2828.

 

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை

தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்

மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்

சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 2829.

 

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்

புனையில் அவனைப் பொதியலும் ஆகும்

எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி

நினையும் அளவில் நினைப்பித் தனனே. 2830.

 

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்

வாலிய பேரமு தாகும் மதுரமும்

போலும் துரியம் பொடிபடி உள்புகச்

சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 2831.

 

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து

தமரத்து நின்ற தனிமையன் ஈசன்

பவளத்து முத்தும் பனிமொழி மாதர்

துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 2832.

 

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்

சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்

பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்

சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 2833.

 

சிவமாய் அவமான மும்மலம் தீரப்

பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்

தவமான சத்திய ஞானானந் தத்தே

துவமார் துரியம் சொரூபம் தாமே. 2834.

 

12. சொரூப உதயம்

 

பரம குரவன் பரம்எங்கு மாகித்

திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று

நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்

அரிய துரியத்து அணைந்துநின் றானே. 2835.

 

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்

அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்

நிலத்திடை வானிடை நீண்டகன் றானை

வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2836.

 

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்

எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்

தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை

பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 2837.

 

சமயச் சுவடும் தனையறி யாமல்

சுமையற்ற காமாதி காரணம் எட்டும்

திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்

அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 2838.

 

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு

வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்

சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற

ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 2839.

 

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்

கருவன்றி யேநின்று தான்கரு வாகும்

அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 2840.

 

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி

உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்

உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்

உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 2841.

 

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்

பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்

பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்

பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 2842.

 

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி

அரியன உற்பலம் ஆமாறு போல

மருவிய சத்தியாதி நான்கும் மதித்த

சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 2943.

 

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்

கரையற்ற சத்தியாதி காணில் அகார

மருவுற்று உகாரம் மகாரம தாக

உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 2944.

 

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 2845.

 

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்

போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே

ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை

நாமாம் முதல்வனும் நான்என லாமே. 2846.

 

13. ஊழ்

 

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்

மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்

வித்தகன் நந்தி விதிவழி யல்லது

தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 2847.

 

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்

வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2848.

 

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை

நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 2849.

 

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்

கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்

தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்

நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 2850.

 

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே. 2851.

 

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்

நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை

வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்

பாடது நந்தி பரிசறி வார்க்கே. 2852.

 

14. சிவ தரிசனம்

 

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 2853.

 

வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்

நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது

போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை

யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2854.

 

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று

உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்

தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா

அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 2855.

 

15. சிவ சொரூப தரிசனம்

 

ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்

ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை

வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 2856.

 

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2857.

 

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்

முன்னி அவர்தம் குறையை முடித்திடும்

மன்னிய கேள்வி மறையவன் மாதவன்

சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 2858.

 

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 2859.

 

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்

சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி

சுத்தப் பிரம துரியம் துரியத்துள்

உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 2860.

 

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல

உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல

தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்

அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 2861.

 

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்

பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா

சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்

சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 2862.

 

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்

அரிய துரியம் அதீதம் புரியில்

விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்

உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 2863.

 

16. முத்தி பேதம், கரும நிருவாணம்

 

ஓதிய முத்தியடைவே உயிர்பர

பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு

ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே

ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 2864.

 

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்

சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2865.

 

17. சூனிய சம்பாஷணை

 

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்

ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்

ஏய பெருமான்இருந்து பொருகின்ற

மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 2866.

 

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி

மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை

மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு

ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2867.

 

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்

சாறுபடுவன நான்கு பனையுள

ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை

ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 2868.

 

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 2869.

 

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்

செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை

மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்

பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 2870.

 

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள

கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது

உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு

வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 2871.

 

மூவணை ஏரும் உழுவது முக்காணி

தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்

நாஅணைகோலி நடுவில் செறுஉழார்

காலணை கோலிக்களர்உழு வாரே. 2872.

 

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள

மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்

பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்

கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 2873.

 

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள

குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள

குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்

பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 2874.

 

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்

காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து

மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 2875.

 

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்

மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்

தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 2876.

 

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி

திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்

விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 2877.

 

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்

கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை

மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்

கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 2878.

 

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது

விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்

விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு

விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 2879.

 

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்

களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்

களர்உழு வார்கள் களரின் முளைத்த

வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 2880.

 

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து

ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு

நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை

ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 2881.

 

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 2882.

 

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 2883.

 

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்

தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்

தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன

மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 2884.

 

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத

மலராத பூவின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 2885.

 

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி

ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 2886.

 

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 2887.

 

பத்துப் பரும்புலி யானை பதினைந்து

வித்தகர் ஐவர் வினோகர் ரெண்மர்

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்

அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 2888.

 

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்

இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்

இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 2889.

 

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்

பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்

முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்

நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 2890.

 

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 2891.

 

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்

உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்

புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 2892.

 

காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி

கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்

மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்

மூடு புகாவிடின் மூவனை யாமே. 2893.

 

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்

காறையும் நாணும் வளையலும் கண்டவர்

பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்

ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 2894.

 

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்

விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்

வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 2895.

 

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்

திருந்திய மாதர் திருமணப் பட்டார்

பெருந்தவப் பூதம் போலுரு வாகும்

இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 2896.

 

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்

ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்

சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற

பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 2897.

 

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை

தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்

குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்

தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 2898.

 

.அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 2899

 

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்

காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்

காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்

கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 2900.

 

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 2901.

 

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்

குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்

கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட

பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 2902.

 

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்

எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே

வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது

கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 2903.

 

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குட்டத்து நீரில் குவளை எழுந்தது

விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 2904.

 

ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன

நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன

ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே. 2905.

 

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்

வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்

கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்

ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 2906.

 

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

யாழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே. 2907.

 

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்

சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்

கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்

மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 2908.

 

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்

இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 2909.

 

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்

முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்

பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்

மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 2910.

 

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 2911.

 

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்

எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி

எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு

ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 2912.

 

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து

எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி

தழுவி வினைசெய்து தான்பய வாது

வழுவாது போவன் வளர்சடை யோனே. 2913.

 

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்

ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்

பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 2914.

 

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு

வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து

ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 2915.

 

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 2916.

 

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 2917.

 

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 2918.

 

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்

கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்

பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்

கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 2919.

 

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை

கூரும் மழைபொழி யாது பொழிபுனல்

தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 2920.

 

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 2921.

 

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 2922.

 

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்

புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது

அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 2923.

 

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்

விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்

களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்

அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 2924.

 

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை

படைகண்டு மீண்டது பாதி வழியில்

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்

அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 2925.

 

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டொடு நாலு புரவியும்

பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 2926.

 

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்

கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்

தூசி மறவன் துணைவழி எய்திடப்

பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 2927.

 

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு

கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு

வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்

வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 2928.

 

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்

தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்

காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 2929.

 

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை

திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்

தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 2930.

 

போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது

தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை

ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது

மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 2931.

 

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே

காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்

வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி

யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 2932.

 

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு

காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 2933.

 

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்

புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்

புலம்பின் அவளொடும் போகம் நுகரும்

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 2934.

 

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை

ஆணி கலங்கில் அதுஇது வாமே. 2935.

 

18. மோன சமாதி

 

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை

சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்

மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு

சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 2936.

 

காட்டும் குறியும் கடந்த அக் காரணம்

ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்

கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது

ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2937.

 

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்

உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 2938.

 

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்

பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்

சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்

உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 2939.

 

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி

அரிய துரியம் அதன்மீது மூன்றாய்

விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே

உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 2940.

 

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி

திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்

பொருவிலி பூதப் படையுடை யாளி

மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 2941.

 

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை

எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்

அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்

தொண்டர் முகந்த துறையறி யோமே. 2942.

 

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல

நிட்களம் அல்ல சகள நிலையல்ல

அற்புத மாகி அனுபோகக் காமம்போல்

கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 2943.

 

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 2944.

 

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்

செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்

கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை

எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 2945.

 

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்

தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை

பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்

கொண்டான் அறிவன் குணம்பல தானே. 2946.

 

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே

சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன

உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்

புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 2947.

 

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து

பதறு படாதே பழமறை பார்த்துக்

கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை

உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 2948.

 

வாடா மலர்புனை சேவடி வானவர்

கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்

சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று

நாடார் அமுதுற நாடார் அமுதமே. 2949.

 

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்

பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்

சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண

மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 2950.

 

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு

ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

வானும் அழிந்து மனமும் அழிந்துபின்

நானும் அழிந்தமை நானறி யேனே. 2951.

 

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்

பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி

அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே

உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 2952.

 

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை

ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 2953.

 

19. வரையுரை மாட்சி

 

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது

தான்அவ னானபின் ஆரை நினைவது

காமனை வென்றகண் ஆரை உகப்பது

தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 2954.

 

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2955.

 

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்

மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை

பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா

தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 2956.

 

20. அணைந்தோர் தன்மை

 

மலமில்லை மாசில்லை மானாபி மானம்

குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை

நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே

பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 2957.

 

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்

கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்

அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2958.

 

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்

சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்

பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு

கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 2959.

 

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்

சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்

சீராடி அங்கே திரிவதால் லால் இனி

யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 2960.

 

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்

தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை

அரிந்தேன் வினையை அயில்மன வாளால்

முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 2961.

 

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்

ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது

நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்

தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 2962.

 

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்

வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்

அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்

சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 2963.

 

பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்

கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை

விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்

துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 2964.

 

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது

அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை

அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து

அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 2965.

 

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்

அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்

எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே

உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 2966.

 

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்

தானே வடவரை ஆதியுமாய நிற்கும்

தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்

தானே உலகில் தலைவனும் ஆமே. 2967.

 

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்

சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்

பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்

தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 2968.

 

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்

சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்

சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்

சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 2969.

 

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்

வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்

வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி

நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 2970.

 

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்

தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்

அவபெரு மான்என்னை யாளுடை நாதன்

பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 2971.

 

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்

துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்

அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்

தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 2972.

 

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து

முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்

தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி

பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 2973.

 

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்

கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்

பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்

வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 2974.

 

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்

பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு

அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்

அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 2975.

 

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்

அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்

விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 2976.

 

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்

வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்

செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்

கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 2977.

 

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று

தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்

பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி

மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 2978.

 

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்

வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 2979.

 

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. 2980.

 

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்

மனம்வி ரிந்து குவிந்தது வாயு

மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்

மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 2981.

 

21 தோத்திரம்

 

மாயனை நாடி மனநெடும் தேரெறிப்

போயின நாடறி யாதே புலம்புவர்

தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்

காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 2982.

 

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்

முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்

பன்னினர் என்றே பாடறி வீரே. 2983.

 

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை

எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை

அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்

பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 2984.

 

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி

புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்

புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்

புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 2985.

 

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 2986.

 

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை

ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்

ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்

காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 2987.

 

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்

போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 2988.

 

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை

ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்

வானோர் உலகம் வழிபட மீண்டபின்

தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 2989.

 

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்

இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்

சுந்தர மாதர் துழனியொன்று அல்லது

அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 2990.

 

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்

எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்

உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்

தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 2991.

 

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்

சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 2992.

 

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்

சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை

புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி

வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 2993.

 

வள்ளல் தலைவனை வானநன் னாடனை

வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்

கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று

உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 2994.

 

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை

நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்

கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்

வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 2995.

 

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்

பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்

திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்

வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 2996.

 

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்

தானகம் இல்லாத் தனியாகும் போதகன்

கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்

பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 2997.

 

விதியது மேலை அமரர் உறையும்

பதியது பாய்புனல் கங்கையும் உண்டு

துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்

பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 2998.

 

மேலது வானவர் கீழது மாதவர்

தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்

கானது கூவிள மாலை கமழ்சடை

ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 2999.

 

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை

ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி

யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்

வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 3000.

 

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை

அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்

நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்

செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. 3001.

 

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்

பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்

பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்

பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 3002.

 

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்

பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்

தந்த உலகெங்கும் தானே பாராபரன்

வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 3003.

 

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்

அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்

அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி

மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 3004.

 

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்

சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்

ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்

ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 3005.

 

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்

பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்

தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்

தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 3006.

 

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ

நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்

பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே

புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 3007.

 

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்

பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்

தராபர னாய்நின்ற தன்மை யுணரார்

நிராபர னாகி நிறைந்துநின் றானே. 3008.

 

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை

ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்

வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்

காற்றது ஈசன் கலந்து நின்றானே. 3009.

 

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்

மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே

புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு

முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 3010.

 

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி

இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்

சிவன்தான் பலபல சீவனு மாகி

நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 3011.

 

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற

தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்

விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப

உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 3012.

 

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து

நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்

செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி

அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 3013.

 

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின

ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி

தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்

வாச மலர்போல் மருவி நின் றானே. 3014.

 

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை

நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்

தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 3015.

 

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்

கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்

வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்

அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 3016.

 

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்

கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்

ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்

வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 3017.

 

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்

கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்

பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்

எண்ணில் னந்தமும் எங்கள் பிரானே. 3018.

 

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்

நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்

சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 3019.

 

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்

அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்

மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்

புறம்பல காணினும் போற்றகி லாரே. 3020.

 

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்

பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்

கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு

எங்குநின் றான்மழை போல்இறை தானே. 3021.

 

உணர்வது வாயுவே உத்தம மாயும்

உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்

புணர்வது வாயும் புல்லிய தாயும்

உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 3022.

 

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்

தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்

தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்

தன்வலி யாலே தடம்கட லாமே. 3023.

 

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை

ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே. 3024.

 

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்

குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது

உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்

பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 3025.

 

22. சர்வ வியாபி

 

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி

ஆயும் அறிவையும் மாயா உபாதியால்

ஏய பரிய புரியும் தனதுஎய்தும்

சாயும் தனது வியாபகம் தானே. 3026.

 

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை

நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 3027.

 

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து

உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி

உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்

கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3028.

 

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்

தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 3029.

 

உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு

இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்

சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி

பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 3030.

 

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்

முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு

மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. 3031.

 

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்

ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்

ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்

நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 3032.

 

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்

காக்கும் அவனித் தலைவனும் அங்குள

நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி

போக்கும் வரவும் புணரல் லானே. 3033.

 

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி

ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்

கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்

ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 3034.

 

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணர்வும் அவனே புலனும் அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 3035.

 

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை

நலமையின் ஞான வழக்கமும் ஆகும்

விலமையில் வைத்துள் வேதியர் கூறும்

பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 3036.

 

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்

மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்

தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்

கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 3037.

 

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி

நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென

நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்

நின்றனன் தானே வளங்கனி யாயே. 3038.

 

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை

அவனே உலகில் அடர்பெரும் பாகன்

அவனே அரும்பல சீவனும் ஆகும்

அவனே இறையென மாலுற்ற வாறே. 3039.

 

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்

விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்

மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்

கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 3040.

 

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்

பண்ணும் திறனும் படைத்த பரமனைக்

கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது

உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 3041.

 

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்

உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்

கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே

திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 3042.

 

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்

செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 3043.

 

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்

எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்

பொதுஅது வான புவனங்கள் எட்டும்

இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 3044.

 

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்

தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்

பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை

ஊரும் சகலன் உலப்பிலி தானே. 3045.

 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 3046

 

23. வாழ்த்து

 

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி

வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்

வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்

வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 3047

 

--- ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று ---

--- திருமூலர் திருமந்திரம் முற்றிற்று ---

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)